Saturday 14 May 2016




அரவாக்குறிச்சி சொல்லும் சேதி!

திமுக,அதிமுக- இரண்டு கட்சிகளின் பணம்பிடிபட்டதின் காரணமாக தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் மட்டும் நேர்மையான தேர்தல் நடந்து விடுமா? ஏற்கெனவே பிடிபட்டிருக்கிற நூறு கோடிக்கும் மேலான பணத்தில் முக்கால்பகுதி இந்த இரண்டு கட்சிக்காரர்களிடமிருந்தே கைப்பற்றப்பட்டிருக்கிறது.அந்த இடங்களிலெல்லாம் ஏன் தேர்தல் தள்ளிவைக்கப்படவில்லை?
இதற்கான காரணத்தை தேர்தல் ஆணையத்திடம் யார் கேட்பது?
அதிகாரவெறியில் பணத்தைக்கொடுத்து ஜனநாயத்தையே கேவலப்படுத்தும் இந்த இரண்டு கட்சிகளும்தான் இதுவரை செய்யாமல் இனி ஊழலற்ற ஆட்சியை நடத்தமுடியும் என நினைக்கிறீர்களா? தேர்தலை தள்ளிவைப்பதுதான் இதற்கு தண்டணையா? முதலில் தண்டனையை அறிவித்துவிட்டு பிறகு நடத்தப்படுவதுதான் நியாயம்!
எத்தனையோ சட்டம் படித்த மேதைகள் நம்மிடம் இருந்தும் நம் மக்களுக்கு அவர்களால் என்ன பயன்?
எது எப்படியோ இவர்களுக்கான பெரும்தண்டனையை யாரும் கொடுக்கப்போவதில்லை. இந்நிலையில் அந்த தண்டணையை குடிமக்களாகிய நாம்தான் தரவேண்டும்.

No comments:

Post a Comment