Friday 13 May 2016




என்ன தண்டனை இவர்களுக்கு?


அரசியல் குறித்த அரிச்சுவடியைக்கூட தெரிந்துகொள்ளாமல் வாக்குரிமையை வைத்துக்கொண்டு தங்களின் எதிர்காலம் பற்றி எந்தக்கவலையும் இன்றி திரியும் நம் இளைஞர்களும், இலவசத்திற்கும்,பணத்திற்கும் கையேந்தி காத்திருக்கும் மக்களும் மீண்டும் தமிழகத்தை தலைதூக்கவிடாமல் செய்து விடுவார்களோ என்னும் அச்சம் மிகுதியாகிக்கொண்டு வருகிறது.
இதனிடையில் பல ஊடகங்கள் கைய்யூட்டைப் பெற்றுக்கொண்டு இரண்டு கட்சிகளுக்கும் இரவு பகல் பாராமல் உழைத்துக்கொண்டிருக்கின்றன.
மக்கள் என்ன நினைப்பார்கள் என சிறிதும் பயமில்லாமல் நம் மூளையை குழப்புவதாக நினைத்துக்கொள்கின்றன! தேர்தல்முடிந்தால் நாம் மக்களிடம்தானே பிழைப்பு நடத்த வேண்டும் என்கின்ற அச்சம் கொஞ்சமும் அவைகளுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. நம்மை சிந்திக்கவிடாமல் கருத்தைத்திணிக்கும் இந்த விலைபோன தரகர்களின் தொலைக்கட்ட்சிகளுக்கும் பத்திரிக்கைகளுக்கும் எவ்வாறு பாடம் புகட்டப்போகிறோம்?

No comments:

Post a Comment