Wednesday 18 May 2016


தீராத வலி!

35 ஆண்டுகளுக்கும் மேலான போராட்டம் என்பதில் எத்தனைத்துயரங்கள் நடந்து முடிந்திருக்கின்றன என்பதை அதனால் பாதிப்புக்குள்ளானவர்கள் தவிர எவராலும் உணர முடியாது!
இரவுப்பகலாக வாழ்வு முழுக்க விடுதலைக்கேப்போராடிமாண்டவர்களும்,பிள்ளைகளையும்,உடன்பிறப்புகளையும்,கணவனையும் பலிகொடுத்துவிட்டு அத்தனைக்கனவுகளும் தகர்ந்து தவிடுப்பொடியாகிப்போனபின் இன்னும் வாழும் நம் உறவுகள் ஒருபக்கம்!
உயிரைக்காப்பாற்றிக்கொள்ள வெளியேறி ஒவ்வொரு நாடாக தப்பித்து தனக்குத்தொடர்பேயில்லாத நாடுகளிலெல்லாம் அகதியாய் தஞ்சம் புகுந்து உறங்குவதற்குக்கூட நேரமின்றி ஒருநாள் விடுதலைக்கிடைக்கும் என்னும் கனவோடு உழைத்து வாழ்ந்துகொண்டிருக்கும் நம் உறவுகளெல்லாம் ஒரு பக்கம்.
இவர்களெல்லாம் இன்று எதைநோக்கி தங்களின் எதிர்கால வாழ்வு என்பது தெரியாமல் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்!
விடுதலைக்கே தன்வாழ்வு என வாழ்க்கையை ஒப்படைத்தவர்களையும் இந்த உலகத்திற்கேத் தெரியும்.
ஈழத்தமிழன் விடுதலைப்பற்றிப்பேசியே எல்லா நிலையிலும் உயர்ந்தவர்களையும் இந்த தமிழகத்திற்குத் தெரியும்.
வீரமரணம் எய்திய போராளிகளின் ஆன்மாக்களும்,ஒன்றுமறியாத அப்பாவி உறவுகளின் ஆன்மாக்களும் எதை நினைத்து சமாதானமடையும்?
அதேபோல் உலகிலேயே பெரும் பணக்காரனாக ஆனாலும்கூட ஈழத்தமிழன் ஒருவனால் தான் நினைத்த நாடு கிடைக்காதவரை சமாதானம் அடைந்துவிட முடியுமா?
காலம் முழுக்க கனன்றுகொண்டேயிருக்கும் அந்த வலியை யாராலும் தீர்த்து வைத்துவிட முடியாது!!

No comments:

Post a Comment