Sunday 15 November 2015

யார் கொலையாளி?
கடந்த ஒரு வாரமாக தொடரும் மனப்பதைப்பிலிருந்து மீளமுடியவில்லை. இன்னும் எத்தனைக்காலதுக்குத்தான் இயற்கையின் மேல் பழியைப்போட்டுவிட்டு தப்பித்துக் கொண்டிருக்கப்போகிறோம்?
வரலாறு பாடத்தை கேலிசெய்தோம். அசோகர், மரங்களை நட்டார்,ஏரி,குளங்களை வெட்டினார், சாலைகளை அமைத்தார் இதையே இன்னும் எத்தனைக் காலத்துக்குத்தான் சொல்லிக்கொடுப்பார்கள் என சலித்துக்கொண்டோம்! இதைச்செய்த அசோக மன்னனின்ஆட்சிதான் சிறந்த ஆட்சி!!
காமராஜர் காலம்வரைதான் இது நடந்தது. அதன்பின் அவற்றையெல்லாம் மூடி ஆக்கிரமித்து அழிக்கும்வேலைதான் நடந்தது. ஒவ்வொரு அழிவின்போதும் அழிவுக்குக்காரணமானவர்களே மக்களுக்கு வந்து ஆறுதல் சொல்வார்கள்.
இந்தக்காட்சிகளை பார்க்கும் மனநிலை இல்லாமல்தான் சென்னையிலேயே இருந்துவிட்டேன்.
யார் யார் இந்த சமூகம் இயங்க வாழ்நாள் முழுக்க உழைத்து வீடில்லாமலும், ஏழ்மையிலும் கிடந்தது மடிகிறார்களோ அந்த உழைக்கும் மக்களுக்குத்தான் அத்தனை பாதிப்புகளும்.
மக்களுக்கேற்ற அரசாங்கம்!
அரசாங்கத்திற்கேற்ற மக்கள்!
வாழ்க மக்களாட்சி!!

No comments:

Post a Comment