Monday 19 October 2015

ஒரு செய்தி இருக்கு!
நான் நினைத்தது போலவே நடிகர் சங்கத்தேர்தல் முடிவு அமைந்திருக்கிறது.இந்தத்தேர்தல் மூலம் மக்களாகிய நமக்கு ஒரு செய்தி இருப்பதாக உணர்கிறேன்.இச்சங்கத்தில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அடக்குமுறையும்,அநீதியும்,அட்டூழியமும் செய்துவந்தவர்களை பொறுத்துக்கொள்ளமுடியாத இளையதலைமுறை தேர்தல்மூலம் விரட்டியடித்து புதிய நம்பிக்கையையும் மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தை
ஐம்பது ஆண்டுகளாக இரண்டு கட்சிகளை உள்ளடக்கிய சில குடும்பங்கள் மட்டுமே தொடர்ந்து மாறி மாறி ஆட்சிசெய்வதைப்பற்றிய சகிப்புத்தன்மையிலிருந்து மக்கள் சிந்திப்பதற்கு இந்த தேர்தல் முடிவு வழிவகுத்துக்கொடுத்திருப்பதாக எனக்குத்தோன்றுகிறது.நடிகர் சங்க உறுப்பினர்கள் விழித்துக்கொண்டது போல் மக்களும் இந்தத்தேர்தலில் ஒருபுதியமாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என நம்புகின்றேன்! இளையதலைமுறை இந்தமுறை இத்தகையமாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக இந்தசட்டமன்றத்தேர்தல் விளங்கியேத்தீரும்!

No comments:

Post a Comment