Thursday 29 October 2015

தேற்றிக்கொள்ள முடியவில்லை!!
இரண்டு பெண் குழந்தைகளுக்குப்பின் மூன்றாவதாக பிறந்த 14 வயது அருமை மகனை டெங்கு காய்ச்சல்நோய்க்குபறிகொடுத்திருக்கும் என் நண்பன் விவேக்கை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை. பிரபுதேவாவும் நானும் இரங்கல்தெரிவிக்க சென்றிருந்தோம்.விவேக்கையும் அவரது மகன் உடலையும் கண்டவுடன் நிலைகுலைந்து போனோம். இதே வயதில் நான்கு ஆண்டுகளுக்கு முன் புற்றுநோய்க்கு தன் மூத்த மகனைப் பறி கொடுத்திருந்த பிரபுதேவாவும் விவேக்கும் கட்டிப்பிடித்து கதறியக்காட்சியை மறக்க முடியவில்லை. வீட்டுக்குத்திரும்பும் போது நண்பன் பிரபுதேவா அழுதுபுலம்பியதில் நானும் கதறி விட்டேன்.
ஒருதுளி கண்ணீர்கூட வழியாமல் நிதானத்தை இழந்து நிலைமறந்திருக்கும் விவேக்கின் மனைவிக்கும்,விவேக்குக்கும் யாராலும் ஆறுதல் சொல்லமுடியவில்லை. இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நம்மையெல்லாம் சிரிக்கவும்சிந்திக்கவும் வைத்தக் கலைஞனை எப்படித்தேற்றுவது தெரியவில்லை!

No comments:

Post a Comment