Sunday 30 August 2015

சொல்லத் தோணுது 49: மக்கள் - குரல் - மன்றங்கள் - தங்கர் பச்சான்




மக்களின் குரல் எழுப்புவதற்காக மக்களால் உருவாக்கப்பட்ட மன் றங்கள்தான் சட்டமன்றங்களும், நாடாளுமன்றமும். ஆனால், அந்த மன்றங்கள் எல்லாம் இப்போது மக்களின் குரலை எழுப்புவதற்கு பதிலாக நாடக மன்றங்களாக மாறிவிட்டன.
கடமையை ஆற்றுவதற்குப் பதிலாக சடங்குகளைக் கடைபிடிப்பதில் மிக வல்லவர்கள் நம் ஆட்சியாளர்கள். மக் களைக் காப்பாற்றுவதற்கு உருவாக்கப் பட்ட அரசியல் சட்டங்களை தங்களுக் குத் தகுந்ததுபோல் எவ்வாறு வளைப் பது என்னும் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்து, அந்த அரசியல் சட்டத்தையே தங்களுக்கு அரணாக மாற்றிக் கொண் டவர்களில் உலகத்திலேயே முதலிடம் நம் அரசியல்வாதிகளுக்குத்தான்.
சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத் துக்கும் செல்லாமலே அவர்களால் ஐந்து ஆண்டுகள் அந்தத் தொகுதி மக்களின் உறுப்பினராக பதவியை அனுபவிக்க முடியும். பலர் எப்போதாவது ஒருமுறை கையெழுத்தை போட்டுவிட்டு வந்துவிடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களைத்தான் நம் நாட்டு மக்கள் மீண்டும் மீண்டும் ஒவ்வொரு தேர்தலிலும் தேர்ந்தெடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
வாக்களித்த பலருக்கு தங்கள் சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயரும் தெரியாது; முகமும் தெரியாது. தேர்தல் நேரத்தில் மட்டும் மக்கள் முன் முகத்தைக் காட்டுவதோடு ஒதுங்கிக் கொள்கிறார்கள். பதவியில் இருக்கும் இந்த ஐந்தாண்டுகள் மட்டுமல்ல; வாழ் நாள் முழுக்க மக்களின் வரிப் பணத் தில் அதற்கான ஊதியத்தையும், சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
மக்கள் மன்றங்களில் மக்களின் குரலை, மக்களின் சிக்கல்களை, மக் களின் தேவைகளை எடுத்துரைத்து கடமை ஆற்றாத பலரே மீண்டும் அடுத்தத் தேர்தலிலும் அதே தொகுதி யில் அதே மக்களிடத்தில் வந்து கூசாமல் ‘பெருவாக்கு வித்தியாசத்தில்’ வெற்றி பெறச் செய்யுங்கள் என வாக்கு கேட் பார்கள். இந்த மக்களும் அவர்களைக் கேள்வி கேட்பது இல்லை. கொடுக்கிற பணத்தை வாங்கிக்கொண்டு அந்த வேட்பாளரின் தகுதியைப் பார்க்காமல் அவர் சார்ந்த கட்சியின் சின்னத்துக்கு வாக்களித்துவிடுகிறார்கள். இதனால் அந்த வேட்பாளர் மீண்டும் மக்களின் சார்பாக ஐந்தாண்டு காலங்களுக்குப் பதவியில் நீடிக்கிறார்.
மக்களுக்காக குரல் எழுப்பாமல் புகழ் பாடுவதற்கு மட்டும் கற்றுக்கொண்டுள்ள சிலர், ஒரு கட்சியின் வாக்குகளைப் பெற்று உறுப்பினராகிவிட்டு பதவி ஏற்றவுடன் தனது சொந்த நலனுக்காக மாற்றுக் கொள்கையுடைய வேறொரு கட்சிக்குத் தாவிவிடும் போக்கும் பெருகிக்கொண்டு வருகிறது.
நான் வாக்களித்த கட்சியில் இருந்து எதற்காக வேறொரு கட்சிக்குத் தாவினீர் கள் என அந்தத் தொகுதி மக்களும் கேட்பது இல்லை. எங்கேயாவது ஒரு தொகுதியில் அப்படிப்பட்டவர்களைத் தொகுதிக்குள் வரவிடாமல் விரட்டி அடித்திருந்தால் அவர்களுக்குத் தன்னை உறுப்பினராக்கிய மக்கள் மேல் பயம் இருந்திருக்கும்.
எந்தத் தகுதியின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் தங்களின் வேட் பாளர்களைத் தேர்வு செய்கின்றன என்பது புரியவில்லை. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பு எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பல உறுப்பினர்கள் இன்னும் உணராததுபோல், மக்களும் உணரவில்லை. மீண்டும் தேர்தல் வந்தால் தங்களின் சிக்கல்களும், தேவைகளும் தீர்ந்துவிடுவதாக எண்ணி ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்துவிட்டு மக்கள் தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள். பொதுக் கூட்டங்களிலும், திருமண மேடைகளிலும் ஆவேசமாக முழங்கு பவர்கள், பேச வேண்டிய மன்றத்தில் பேசாமல் பெட்டிப் பாம்பாய் முடங்கிப் போய் உட்கார்ந்திருக்கிறார்கள். தலை வரைப் போற்றுவதற்கே ஐந்தாண்டு களை வீணாக்கிவிட்டு அச்சமின்றி மீண்டும் அதே தொகுதியில் வேட்பாள ராக வந்து நிற்கிறார்கள்.
முன்பெல்லாம் சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ கூடப்போகிறது என்றால் மக்களிடத்திலும் ஊடகங் களிலும் ஒரு எதிர்ப்பார்ப்பு இருக் கும். எதிர்க்கட்சிகளாக எதிரணியில் இருப் பவர்கள் விவாதம் செய்து தங்களின் தேவையை நிறைவேற்றுவார்கள் என் கின்ற எதிர்பார்ப்பு இருந்தது. எப்போது ஒரே கட்சி பெரும்பான்மையான உறுப் பினர்களுடன் ஆட்சியைப் பிடிக்கிறதோ, அப்போதே எதிர்க்கட்சிகளுக்கும் மக் களின் குரலுக்கும் இடமில்லாமல் போய் விடுகிறது. பெரும்பான்மையாக இருப் பவர்கள் அவர்களின் வசதிக்கு ஏற்றபடி எந்த சட்டத்தையும் உருவாக்கிக்கொள் ளும் இடமாக மக்களின் இரு மன்றங் களும் முடங்கிப்போகின்றன. அரசு என்பது ஆளும் கட்சிக்காகவும், சபை என்பது எதிர்கட்சிக்காகவும் இருந்த இடம், பெரும்பான்மை உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்கிற ஒரே காரணத்துக் காக சட்டமன்றம், நாடாளுமன்றம் இரண்டுமே ஆளுங்கட்சியின் இடமாக மாறிப் போகிறது.
மக்களுக்காகப் போராடுபவர்கள், குரல் எழுப்புபவர்கள் எதிரணியில் இருப் பவர்கள்தான். அவர்கள் மூலமாகத்தான் இந்நாட்டின், இம்மாநிலங்களின் தேவைகளும், சிக்கல்களும் விவாதித்து தீர்க்கப்படும். அவ்வாறு இல்லாமல் போகும்போது இரு சபைகளும் வெறும் சடங்குக்காகவே நடத்தி முடிக்கப்படும்.
பெரும்பான்மை இல்லாததால் எதி ரணியில், எதிர்க்கட்சியில் இருப்பவர் களால் எதைப் பற்றியும் பேச முடிவ தில்லை. பேசினாலும் அந்தந்தக் கட்சித் தலைவர்கள் வரலாறுகளை, செயல் பாடுகளை, சீண்டல்களைப் பற்றிப் பேசியே ஐந்தாண்டுகளைக் கழித்துவிடு கிறார்கள். பேச மறுப்பதைக் காரணம் காட்டி மற்ற கட்சிகளின் உறுப்பினர்கள் வெளியேறிவிடுவது, ஆளுங் கட்சியின ருக்கு வசதியாகிவிடுகிறது. மக்கள் பிரச் சினைகளை விவாதித்துத் தீர்க்கவேண் டிய மன்றங்கள் வெற்றுப் புகழ்பாடும் மன்றங்களாகவும், வசைபாடும் மன்றங்களாகவும் சிலர் அதைக் கண்டு பெருமகிழ்ச்சி கொள்வதற்காகவும் மட்டுமே கூடிக் கொண்டிருப்பது இந்த நாட்டுக்கும், அவர்களைத் தேர்ந் தெடுத்து அனுப்பிய மக்களுக்கும் எவ்வளவு பெரிய துரோகச் செயல்!
தமிழகத்தில் கடந்த சில ஆட்சி களில்தான் எதிர்க்கட்சித் தலைவர்களே வராமல் சட்டமன்றம் செயல்படுகிறது. பிற நாடுகளில் இருப்பதுபோல் தேர்தலில் பெற்ற வாக்குகளின் விழுக்காட்டு அடிப் படையில் இரு மன்றங்களிலும் மக்களின் பிரதிநிதிகள் உருவாக்கப்பட்டால் அப் போதுதான் அது உண்மையான மக்கள் மன்றம். பெரும்பான்மை மக்களால் வாக்களித்த கட்சிகள் மூன்றாவது இடத்துக்கும் நான்காவது இடத்துக்கும் போய்விடுவதும், குறைந்த அளவில் வாக்குகளைப் பெற்றக் கட்சி வெற்றி பெற்ற தொகுதி எண்ணிக்கையின் அடிப் படையில் இரண்டாவது இடத்துக்கு வந்து எதிக்கட்சியாக ஏற்கப்படுவதும் இனியும் தொடரத்தான் வேண்டுமா?
‘சட்டமன்றம் நடந்துகெண்டிருக் கிறதே, உங்களது தொகுதியின் சார்பாக என்னென்னவற்றைப் பேசுவதற்குத் தயார்ப்படுத்தியிருக்கிறீர்கள் என ஒரு சட்டமன்ற உறுப்பினரைக் கேட்டேன். ‘‘அரசியலில் சேர்ந்து எதை யாவது மக் களுக்கு செய்யலாம் என்கிற எண்ணத் துடன் அரசியலுக்கு வருபவர்களுக்கு அதற்கான இடமில்லை இது’’ என அந்த உறுப்பினர் கூறினார்.
முதல் முறை சட்டமன்றத்துக்குச் சென் றவரின் மனமுடைந்த குரல் ஒரு செய்தியை எனக்கு அறிவுறுத்துகிறது. இந்திய அரசியலில் சில குடும்பங்கள் மட்டுமே அரசியலை ஒரு பரம்பரைத் தொழிலாக செய்துகொண்டு, பொறுப் புணர்வு வாய்ந்த இளைஞர்களுக்கு வழிவிடாமல் செய்து கொண்டிருப்பது, தொடர்ந்து தேர்தலை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கும் இந்த மக்களுக்கு இழைக்கும் துரோகம் இல்லையா?
மக்களின் கணக்கற்ற சிக்கல்களுக் கும், வாழ்வாதார உரிமைகளுக்கும், தேவைகளுக்கும் இரு மன்றங்களும் விவாதிக்கப்படாமல் ஒரு சடங்காகவே நடந்து முடிவது போன்ற சோகத்தைக் காட்டிலும் இம்மக்களுக்கான சோகம் எதுவாக இருக்க முடியும்?
- இன்னும் சொல்லத்தோணுது 
எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள: thankartamil@gmail.com

1 comment:

  1. இதனை புரிந்து கொள்ளக் கூட இயலாத மக்கள் தான் அதிகம்

    ReplyDelete